Advertisement

கமகமக்கும் காடை பிரியாணி செய்து அசத்துங்கள்!!!

By: Nagaraj Tue, 21 June 2022 12:14:16 PM

கமகமக்கும் காடை பிரியாணி செய்து அசத்துங்கள்!!!

சென்னை: சிக்கன், மட்டன் பிரியாணி செய்திருப்பீர்கள். ருசியான முறையில் காடை பிரியாணி செய்து பாருங்கள். ருசியில் மயங்கி விடுவீர்கள்.


தேவையான பொருட்கள் :

காடை – 4
சீரகச் சம்பா அரிசி – 750 கிராம்
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 5
புதினா இலை – 50 கிராம்
கொத்தமல்லித்தழை – 50 கிராம்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீ ஸ்பூன்
தயிர் – 50 மில்லி
தேங்காய்ப்பால் – 100 மில்லி
பட்டை – 2
ஏலக்காய் – 2
கிராம்பு – 4
பிரிஞ்சி இலை – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 100 மில்லி
நெய் – 50 மில்லி

பிரியாணி மசாலா செய்ய :
பட்டை – 2
ஏலக்காய் – 4
கிராம்பு – 6
பூண்டு – 50 கிராம்
இஞ்சி-1 துண்டு

quail,samba rice,onions,tomatoes,green chillies,mint ,காடை,  சீரகச் சம்பா அரிசி, வெங்காயம்,  தக்காளி,  பச்சை மிளகாய், புதினா

செய்முறை: வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும். சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்க வேண்டும்.

அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து அது குழையும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு, பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்க காடை பிரியாணி தயார். ருசியும் மணமும் அபாரமாக இருக்கும்.

Tags :
|
|