Advertisement

மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட இறால் பக்கோடா

By: Nagaraj Sun, 25 Dec 2022 10:20:23 AM

மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட இறால் பக்கோடா

சென்னை: மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட இறால் பக்கோடா செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
இறால் மீன் ( பெரியது ) : 1/2 கிலோ
கடலை மாவு : ஒரு கப்
பேக்கிங் பவுடர் : ஒரு டீஸ்பூன்
எண்ணெய் : பொறிக்க தேவையான அளவு
உப்பு : ருசிக்கேற்ப

shrimp,baguette,chickpea flour,chili powder,oil ,இறால், பக்கோடா, கடலை மாவு, மிளகாய் தூள், எண்ணெய்

செய்முறை: முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். கடலை மாவு, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் மிளகாய்த் தூள் எல்லாவற்றையும் தண்ணிர் விட்டு கரைத்து கொள்ள வேண்டும்.

5 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர் வாணலியில் எண்ணையை உற்றி சூடாக்கி இறாலை மாவில் முக்கி எடுத்து போட்டு பொறிக்க வேண்டும். இறால், பக்கோடா மெத்தென்று சாப்பிட சுவையாக இருக்கும்.

இறாலையும் மற்ற மசாலா பொருட்களையும் அதிக தண்ணிர் சேர்க்காமல் பிசைந்தது அப்படியே சூடான எண்ணெயில் போட்டுபொறித்து எடுக்கலாம்.

Tags :
|