Advertisement

அவசர நேரத்தில் கைக் கொடுக்கும் திடீர் சட்னிப் பொடி

By: Nagaraj Fri, 28 Aug 2020 08:16:39 AM

அவசர நேரத்தில் கைக் கொடுக்கும் திடீர் சட்னிப் பொடி

திடீர் சட்னி பொடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களின் அவசரமான காலை நேரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையானவை:
உலர்ந்த தேங்காய் துருவல்-100கிராம்
(கொப்பரைக்கு முந்தைய நிலையில் உள்ளது )
பொட்டு கடலை 50 கிராம்
உப்பு - தேவைக்கு
கடுகு-தாளிக்க
உலர்ந்த பச்சை மிளகாய்-25 கிராம்
உலர்ந்த புளி சிறிதளவு
உளுந்து-தாளிக்க

coconut crumbs,ingredients,peas,chutney,dried green chillies ,
தேங்காய் துருவல், பொருட்கள், உளுந்து, சட்னி, உலர்ந்த பச்சை மிளகாய்

செய்முறை: வெறும் வாணலியை நன்கு காயவிட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும் உளுந்தை சிவக்க வறுத்து விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்.

பின்பு உலர்ந்த தேங்காய் துருவல் தவிர மீதம் உள்ள பொருட்கள் அனைத்தையும் அரைத்து விட்டு கடைசியாக உலர்ந்த தேங்காய் துருவல் போட்டு அரைத்து தாளித்த பொருட்களை கலந்து காற்று பூகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்

தேவைப்படும் போது தண்ணீர் விட்டு கரைத்தால் சட்னி ரெடி. காலை நேர பரபரப்பில் இது உங்களுக்கு மிகவும் கைக்கொடுக்கும்.

Tags :
|