Advertisement

ருசியே... ருசி என்று அனைவரும் பாராட்டும் வகையில் நாட்டு கோழி குருமா செய்து பாருங்கள்

By: Nagaraj Wed, 13 Sept 2023 6:14:14 PM

ருசியே... ருசி என்று அனைவரும் பாராட்டும் வகையில் நாட்டு கோழி குருமா செய்து பாருங்கள்

சென்னை: அசைவ பிரியர்களுக்கு பிடித்த நாட்டு கோழி குருமாவை சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:நாட்டுக்கோழி - ஒரு கிலோசின்ன வெங்காயம் - 10தக்காளி - 2இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்தனியா தூள் - ஒரு ஸ்பூன்தேங்காய் - அரை மூடிகசகசா - ஒரு ஸ்பூன்முந்திரி - தேவையான அளவுநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு

country chicken,kuruma,crazy flavor,coconut paste,tomato,spices ,நாட்டுக்கோழி, குருமா, அசத்தல் சுவை, தேங்காய் விழுது, தக்காளி, மசாலா

செய்முறை: நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.
மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும். அதில் கொஞ்சம் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான நாட்டு கோழி குருமா தயார்.

Tags :
|
|