Advertisement

ருசியாக மைசூர் ரசம் செய்து பாருங்கள்... குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள்

By: Nagaraj Sun, 12 Nov 2023 4:02:01 PM

ருசியாக மைசூர் ரசம் செய்து பாருங்கள்... குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள்

சென்னை: மைசூர் ரசம் செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களை பாராட்டுவார்கள். இதன் செய்முறை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:
பருப்பு வேகவைத்த தண்ணீர் - ஒன்றரை லிட்டர்புளி - பெரிய நெல்லிக்காய் அளவுதக்காளி - 2பூண்டு - 5 பல்கடுகு - சிறிதளவுஉளுந்து - அரை டீஸ்பூன்நெய் - ஒரு டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்கொத்தமல்லித்தழை - சிறிதளவு

அரைக்க:
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்பெருங்காயத்தூள் - சிறிதளவுசீரகம் - அரை டீஸ்பூன்

sour water,chickpeas,turmeric powder,curry leaves,garlic ,புளித்தண்ணீர், கடலை பருப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பூண்டு

செய்முறை: அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தட்டிய பூண்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் கரைத்த புளித் தண்ணீரை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். லேசாக நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். ருசி பிரமாதமாக இருக்கும்.

Tags :