Advertisement

பருப்பு இல்லாத காய் சாம்பார் ஒரு முறை செய்து பாருங்க

By: vaithegi Tue, 29 Aug 2023 1:23:18 PM

பருப்பு இல்லாத காய் சாம்பார் ஒரு முறை செய்து பாருங்க

சாம்பார் என்றாலே அது பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு டிஷ் தானே, அப்படித் தான் இது வரையில் நாம் அறிந்து வைத்திருப்போம். ஆனால் காய் சாம்பார் பருப்பை சேர்க்காமல் நல்ல ருசியுடன் செய்யலாம் .வாங்க அதை எப்படி செய்ய வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.

செய்முறை விளக்கம்:
இந்த சாம்பார் செய்ய முதலில் ஒரு மசாலாவை நாம் அரைக்க வேண்டும் அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை 1 வெங்காயத்தை மீடியம் துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 2 தக்காளி அதையும் நறுக்கி சேர்த்து பிறகு 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் கொஞ்சமாக புளி இவை அனைத்தையும் சேர்த்த பிறகு லேசாக தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது சாம்பாரை தாளித்து விடுவோம். அதற்கு குக்கரில் உங்களுக்கு இந்த சாம்பாருக்கு எந்தெந்த காய்கள் செய்ய விருப்பமோ அவைகள் அனைத்தையும் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் உப்பு என இவை அனைத்தையும் சேர்த்த பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவையும் இதில் சேர்த்து கால் கப் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள் .

sambar,lentils ,சாம்பார் ,பருப்பு

இப்போது அடுப்பை பற்ற வைத்து தயார் செய்து வைத்த சாம்பாரை அதில் வைத்த பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்த பிறகு நன்றாக கலந்து மூடி போட்டு மூடி விடுங்கள். குக்கர் 2 விசில் வரும் வரை காத்திருங்கள். அதன் பிறகு அடுத்து அணைத்து விடுங்கள். குக்கர் விசில் இறங்கிய பிறகு மூடியை திறந்து பாருங்கள். நல்ல கம கமன்னு என்று வாசனை உடன் பருப்பு சேர்க்காத காய் சாம்பார் தயார்.

இந்த சாம்பாரை அப்படியே கூட நீங்கள் சாப்பிடலாம் ஆனால் தாளித்து சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும். அதற்கு ஒரு தாளிப்பு கரண்டியில் கொஞ்சம் கடலை எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை உருவி சேர்த்து பொரிந்த பிறகு தாளிப்பை சாம்பாரில் ஊற்றி விடுங்கள். சாம்பார் இன்னும் கமகமவென்று வாசனை வீசும்.இப்போது அட்டகாசமான சுவையில் வீடு மணக்கும் அளவுக்கு சாம்பார் தயார்


Tags :
|