Advertisement

தேங்காய், பூண்டு துவையல் செய்து பாருங்கள்... அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

By: Nagaraj Fri, 27 Oct 2023 5:53:51 PM

தேங்காய், பூண்டு துவையல் செய்து பாருங்கள்... அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

சென்னை: சாதம், குழம்பு, கூட்டு எல்லாம் இருந்தாலும், துவையலும் இடம் பெற்றால் சாப்பாடு கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இந்த துவையல் வகைகள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் கலவை சாதமான எலுமிச்சை சாதம், புளி சாதம் அல்லது தேங்காய் சாதத்திற்கும் சுவையாக இருக்கும். அனைத்தும் உடலுக்கு நல்லது மற்றும் வயிற்றுக்கும் எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கொடுக்கலாம்.
தேவையானவை:துருவிய தேங்காய் - 1 கப்,பச்சை மிளகாய் - 3,பூண்டு - 2 பற்கள்,புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,உப்பு - தேவைக்கு.

grind the sambar rice,coconut,rinse,garlic,tamarind ,சாம்பார் சாதம், தேங்காய், துவையல், பூண்டு, புளி, அரைக்கவும்

செய்முறை: கடாயில் சிறிது எண்ணை சேர்த்து. தேங்காய், பச்ைச மிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.
தேங்காய், பச்சை மிளகாய் நன்கு அரைபட்டதும், பூண்டு பற்களை கடைசியாக சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். மழைக்காலத்தில் சூடான சாம்பார் சாதத்துக்கு ஏற்றது.

Tags :
|
|