- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- காய்கறி இல்லையா... கவலையே வேண்டாம்... செம சாம்பார் செய்முறை உங்களுக்காக!!!
காய்கறி இல்லையா... கவலையே வேண்டாம்... செம சாம்பார் செய்முறை உங்களுக்காக!!!
By: Nagaraj Tue, 04 Oct 2022 10:35:22 PM
வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில் உடனடியாக தயாராகும் இன்ஸ்டன்ட் சாம்பார் எப்படி செய்வது என்று தெரியுங்களா. இதோ அதன் செய்முறை உங்களுக்காக.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 150 கிராம் பூண்டு பல் – 4
பச்சை மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டிகடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
வரமிளகாய் – 5
பெரிய வெங்காயம் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – ஒன்று
புளி – சிறு எலுமிச்சை பழம் அளவு
செய்முறை: முதலில் ஊற வைத்த துவரம் பருப்பை நன்கு கழுவி சுத்தம்
செய்து, குக்கரில் போடவும். இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள்,
தக்காளி, உப்பு, பெருங்காயம் மற்றும் சிறிதளவு எண்ணெய் ஆகியவை சேர்த்து
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
பருப்பு
வெந்ததும் அதனை கடைந்து வையுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து
அதில் எண்ணெய் ஊற்றி காய விடவும். இப்போது கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,
கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அடுத்து
நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக
வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய
வதங்கிய பின் மசித்து வைத்த பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்
ஊற்றவும். சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். ஒரு
கொதி வந்தவுடன் புளி கரைசல் ஊற்றி இறக்கினால் சுவையான சாம்பார் தயார்.
சாதம், இட்லி, தோசை அனைத்திற்கும் இந்த சாம்பார் அற்புதமாக இருக்கும்.