Advertisement

தங்கம் விலை மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனை

By: Monisha Fri, 11 Dec 2020 2:35:36 PM

தங்கம் விலை மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பின்னர் தங்கம் விலை சில வாரங்களுக்கு முன்பு குறைந்தபடி இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக விலை மீண்டும் உயர்ந்தபடியே இருந்து வருகிறது.

gold,price,pound,silver,rise ,தங்கம்,விலை,சவரன்,வெள்ளி,உயர்வு

கடந்த 3-ந்தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ.496 குறைந்து ரூ.36 ஆயிரத்து 976-க்கு விற்றது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 112-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,639 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.67 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20-க்கு விற்கிறது.

Tags :
|
|
|
|