- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இன்னும் ஓரிரு மாதங்களுக்கு தங்கம் விலை உயரக்கூடும்
இன்னும் ஓரிரு மாதங்களுக்கு தங்கம் விலை உயரக்கூடும்
By: vaithegi Thu, 30 Nov 2023 11:06:45 AM
சென்னை: கடந்த 2022 டிச.26-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.43,040 ஆக உயர்ந்தது. அதன் பின்னர், இந்த ஆண்டுஜன.27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரூ.42,700 முதல் ரூ.42,800 வரை விற்பனையானது. பிப். 2-ம் தேதி ரூ.44,040, மார்ச் 5-ம் தேதி ரூ.45,520, மே 3-ம் தேதி ரூ.45,648 என தொடர்ந்து உயர்ந்தது. ஜூன் 4-ம் தேதி ரூ.46,000 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்தது. எனவே இதன்படி, ஒரு கிராம் ரூ.90 அதிகரித்து ரூ.5,870-க்கும், 1 பவுன் ரூ.720 அதிகரித்து ரூ.46,960-க்கும் விற்பனையானது. எனவே இதன்மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.50,720-க்கு விற்பனையாகிறது.
இதையடுத்து இதுகுறித்து சென்னை தங்க நகை, வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து உள்ளதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
மேலும் அத்துடன், உள்நாட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. எனவே, இன்னும் ஓரிரு மாதங்களுக்கு தங்கம் விலை அதிகரிக்கக்கூடும்’’ என்றார்.நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.82.20-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.82,200-க்கும் விற்பனையானது.