- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு
By: Monisha Sat, 25 July 2020 12:01:16 PM
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
அதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தில் உள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.19 அதிகரித்து ரூ.4,904க்கு விற்பனை விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து ரூ.66.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.