- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிப்பு
மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிப்பு
By: vaithegi Wed, 26 Apr 2023 12:45:57 PM
சென்னை: சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு .... நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படுவதால் தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாய் இருந்து கொண்டு வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு வருடமும் வழக்கமாகவே அக்ஷய திருதியின் போது தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து அக்ஷய திருதியை முடிவடைந்ததும் விலை குறைய ஆரம்பிக்கும்.
ஆனால், இந்த வருடம் அக்ஷய திருதியை முடிந்த பிறகும் கூட தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருக்கிறது.அதாவது, சென்னையில் நேற்றைய விலைப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5630 ரூபாய்க்கும், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45040க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து 5642 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்க நகையின் விலை 96 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ.45136க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ளியின் விலையை நேற்றைய விலையுடன் ஒப்பிடும்பொழுது இன்று 50 காசுகள் குறைந்துள்ளது. அதாவது நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.80.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.