- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்தது ஏர்டெல் நிறுவனம்!
புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்தது ஏர்டெல் நிறுவனம்!
By: Monisha Wed, 08 July 2020 6:31:19 PM
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 289 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ரூ. 289 பிரீபெயிட் சலுகை தவிர ரூ. 79 டாப்-அப் வவுச்சர் ஒன்றையும் ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு ஜீ5 பிரீமியம் சந்தா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. பொதுவாக ஜீ5 மாதாந்திர சந்தாவுக்கான கட்டணம் ரூ. 99 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
தற்சமயம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 289 சலுகையை தேர்வு செய்யும் போது தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜீ5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சந்தா உள்ளிட்டவற்றை 28 நாட்களுக்கு பெற முடியும்.
மேலும் இந்த சலுகையில் விண்க் மியூசிக் வசதி, ஷா அகாடமயில் ஒரு வருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.