- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- ஜியோவை விட கூடுதல் வாடிக்கையாளர்களை பெற்ற ஏர்டெல் நிறுவனம்
ஜியோவை விட கூடுதல் வாடிக்கையாளர்களை பெற்ற ஏர்டெல் நிறுவனம்
By: Nagaraj Sat, 05 Dec 2020 09:18:59 AM
புதிய வாடிக்கையாளர்கள்... நான்கு ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக கடந்த செப்டம்பர் மாதத்தில், 'ரிலையன்ஸ் ஜியோ'வை விட, 'ஏர்டெல்' நிறுவனம், அதிகளவில் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
கடந்த, 2016 செப்டம்பரில், ஜியோ அறிமுகம் ஆனதிலிருந்தே, தொடர்ந்து பிற நிறுவனங்களை விட, அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பரில், முதன் முறையாக, ஏர்டெல் அதிகளவிலான புதிய
வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான,
'டிராய்' தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஏர்டெல், 37.7 லட்சம் புதிய
வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
இதற்கடுத்து, ரிலையன்ஸ் ஜியோ, 14.6
லட்சம் வாடிக்கையாளர்களையும்; பி.எஸ்.என்.எல்., 78 ஆயிரத்து, 454
வாடிக்கையாளர்களையும் கூடுதலாக பெற்றுள்ளன. மாறாக, 'வோடபோன் ஐடியா' 46.5
லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.