Advertisement

ரூ. 1 கோடி மதிப்புள்ள மொபைல் போன்களை திருடி வசமாக சிக்கிய அமேசான் ஊழியர்கள்

By: Karunakaran Tue, 22 Dec 2020 2:46:22 PM

ரூ. 1 கோடி மதிப்புள்ள மொபைல் போன்களை திருடி வசமாக சிக்கிய அமேசான் ஊழியர்கள்

அமேசான் நிறுவன ஊழியர்கள் ரூ. 1 கோடி மதிப்புள்ள மொபைல் போன்களை திருடி வசமாக சிக்கியயுள்ளனர். அமேசான் நிறுவனத்தின் குருகிராம் கிடங்கில் இருந்து மொபைல் போன்களை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிடங்கில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிடங்கில் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

இதனை ஊழியர்கள் பயன்படுத்திக் கொண்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குருகிராம் கிடங்கில் இருந்து ஊழியர்கள் மொத்தம் 78 மொபைல் போன்களை திருடி உள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும்.

amazon,employees,1 crore,mobile phones ,அமேசான், ஊழியர்கள், 1 கோடி, மொபைல் போன்கள்

வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 40 போன்கள் தொடர்ந்து மாயமாக உள்ளது.

கைதான ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு ஐபோன் என இரண்டு மாதங்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. பின் அமேசான் நடத்திய ஆய்வில் இரு ஊழியர்கள் மொபைல் போன்களை திருடி சென்று விற்றதை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|