- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்!
புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்!
By: Monisha Wed, 03 June 2020 5:25:19 PM
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 365 விலையில் பிரீபெயிட் சலுகையினை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் அறிவித்து இருக்கிறது. புதிய சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ. 365 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த பலன்களுக்கான வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.
புதிய ரூ. 365 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதனை கடந்ததும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
இதேபோன்று அதிவேக டேட்டா பலன்களும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கேபியாக குறைக்கப்படும். இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் பிரத்யேக ரிங்பேக் டோன் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இந்த சலுகையின் பலன்கள் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்களை தொடர்ந்து பயன்படுத்த பயனர்கள் வாய்ஸ் மற்றும் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.