- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- நாளை முதல் சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஒன் பிளஸ் 8 ப்ரோ 5G விற்பனைக்கு வருது
நாளை முதல் சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஒன் பிளஸ் 8 ப்ரோ 5G விற்பனைக்கு வருது
By: Nagaraj Sun, 14 June 2020 11:56:57 PM
சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஒன் பிளஸ் 8 ப்ரோ 5G விற்பனையானது நாளை (15ம் தேதி) முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆரம்பத்தில் இது மே 29 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஸ்மார்ட்போன் விற்பனை தடைப்பட்டது. இந்நிலையில் தற்போது நாளை முதல் விற்பனையினை தொடங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒன் பிளஸ் 8 வரிசை 5G-க்கு தொடர்ச்சியான விநியோகத்தை வழங்குவதே எங்கள் குறிக்கோள். இந்த தயாரிப்பின் குறைந்த பங்கு காரணமாக, நாங்கள் அதை குறைந்த விற்பனையில் சந்தைக்குக் கொண்டு வருகிறோம்." என குறிப்பிட்டுள்ளது.
கிடைத்த தகவல்கள் படி இந்தியாவில், ஒன் பிளஸ் 8 ப்ரோ 8GB ROM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகைகளின் விலை ரூ.54,999-ஆகவும் 12GB ROM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகைகளின் விலை ரூ.59,999-ஆகவும் இருக்கும் என தெரிகிறது
இந்த ஸ்மார்ட்போன் ஸ்வாப்டிராகன் 865 சிப் ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 55 5G மோடம்-RF சிஸ்டத்துடன் வருகிறது. இந்த சாதனம் 30 சதவிகிதம் வேகமான மெமரி வேகம் மற்றும் 20 சதவிகிதம் சக்தி திறன் மற்றும் 256GB உள் சேமிப்பு மற்றும் 12GB ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளது.