- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- நேரக்கட்டுப்பாடு காரணத்தால் பட்டாசு விற்பனை மந்தம்
நேரக்கட்டுப்பாடு காரணத்தால் பட்டாசு விற்பனை மந்தம்
By: Nagaraj Sat, 22 Oct 2022 11:03:53 AM
திருச்சி:
பட்டாசு விற்பனை டல்... திருச்சி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை
களைகட்டி வருகிறது. ஆனால் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதித்ததால்
பொதுமக்கள் பட்டாசு வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.
திருச்சியின்
பல பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு
வருகிறது. குறிப்பாக பாலக்கரை, தென்னூர், சத்திரம் பேருந்து நிலையம்,
மத்திய பேருந்து நிலையம் உட்பட இடங்களில் அதிகப்படியான பட்டாசு கடைகள்
இயங்கி வருகின்றன.
இந்நிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு
விதித்ததால் பொதுமக்கள் பட்டாசு வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.
திருச்சி பாலக்கரை அருகே அம்மன் பட்டாசு கடை பல ஆண்டுகளாக நடத்தி
வருகிறார்கள்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு குறிப்பாக
சிறுவர்களுக்கு அதிகப்படியான பட்டாசு ரகங்கள் வந்துள்ளது .மேலும்
பெரியவர்களுக்கான பட்டாசு ரகங்களும் விற்பனை செய்து வருகிறோம் ஆனால்
பொதுமக்கள் நேரக் கட்டுப்பாடு விகிதத்தால் பட்டாசு வாங்க தயக்கம் காட்டி
வருகிறார்கள்
மேலும் தீபாவளி ஒரு சில நாட்களே இருக்க நாங்கள்
எதிர்பார்த்த வியாபாரம் நடக்கவில்லை மேலும் தொடர் மழையால் மக்கள் யாரும்
பட்டாசு வாங்க வருவதில்லை என தெரிவித்தனர்.