- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு
முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு
By: vaithegi Thu, 19 Oct 2023 1:28:41 PM
சென்னை: தமிழகத்தில் நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கோழி பண்ணைகள் இருக்கிறது. இதனை அடுத்து இங்கு தினமும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் இந்துக்கள் பலர் விரதம் இருப்பார்கள். அதனால் முட்டை விற்பனை குறைந்தது. எனவே கோழி பண்ணையாளர்கள் முட்டை உற்பத்தியை குறைத்து கொண்டனர்.
இந்நிலையில் புரட்டாசி முடிவடைந்து உள்ள நிலையில் இதனால் முட்டையின் நுகர்வு அதிகரிக்கும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது தேவை அதிகரிப்பதால் முட்டை விலை 5 முதல் 10 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.
இதையடுத்து நேற்றைய நிலவரப்படி 1 முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 510 காசிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.