- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- ஒரு வருடம் கடந்த நிலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்
ஒரு வருடம் கடந்த நிலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்
By: vaithegi Sun, 21 May 2023 10:25:42 AM
சென்னை: 365-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை ..... கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% அதிகரித்தது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.
அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 35 அல்லது 0.59% என சரிந்து ரூ.5,922 ஆக உள்ளது.
ஆனால், ஒரு வருடம் நிறைவடைந்த நிலையிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
365-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.