- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.152 அதிகரிப்பு
தங்கம் விலை கிராமுக்கு ரூ.152 அதிகரிப்பு
By: Monisha Tue, 07 July 2020 1:31:34 PM
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, கடந்த மாதம் ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடன் தங்கம் விலை காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 5 நாட்களாக ரூ.36,976க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.37,128க்கு விற்பனையாகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.4,641-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராம் 53 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகிறது.