Advertisement

தங்கத்தின் விலை இன்று மீண்டும் உச்சம்

By: vaithegi Mon, 14 Nov 2022 3:08:46 PM

தங்கத்தின் விலை இன்று மீண்டும் உச்சம்

சென்னை: தங்கத்தின் விலையானது இன்று சவரனுக்கு 152 ரூபாய் உயர்வு .... தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து படிப்படியாக தங்கத்தின் விலை உயர்ந்து தற்போது ரூ.39 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்படி நேற்றைய தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.39,136 என விற்பனை செய்யப்பட்டது.

இதே போல் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,892 என விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து கிராம் ரூ.4,900-ஐ தாண்டியுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

gold price,chennai ,தங்கத்தின் விலை ,சென்னை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,901-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, ரூ.39,208க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் 67.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ 67,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Tags :