Advertisement

இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்!

By: Monisha Mon, 13 July 2020 6:02:12 PM

இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்!

ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனம் அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

கூகுள் ஃபார் இந்தியா 2020 நிகழ்வு ஆன்லைன் முறையில் நடைபெற்றது. யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட்ட இவ்விழாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் இந்தியா அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

india,google,investment,sundar pichai ,இந்தியா,கூகுள் நிறுவனம்,முதலீடு,சுந்தர் பிச்சை

இந்த நிகழ்வில் பேசிய சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனம் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

முதலீட்டின் படி இந்த தொகை முதலீடுகள், பல்வேறு பணிகளில் கூட்டணி அமைப்பது என பல்வேறு விவகாரங்களில் செலவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் இந்த முதலீடுகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags :
|
|