- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது
ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது
By: vaithegi Fri, 15 Sept 2023 12:23:45 PM
சென்னை: ஒரு சவரன் 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ... இந்தியாவில் பங்கு சந்தை நிலவரம், உள்நாட்டில் எரிபொருட்களின் விலை, ஏற்றுமதி, இறக்குமதி ஆகிவற்றைப் பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னையில் நேற்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5950 க்கும், சவரனுக்கு ரூ. 47,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் அபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5480 க்கும், சவரனுக்கு ரூ.43,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. அதாவது, 24 கேரட் ரூ.20 அதிகரித்து ரூ.5970க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.47,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5500க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 காசுகள் அதிகரித்து ரூ.77.50க்கு மற்றும் ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தங்கத்தின் விலை மீண்டும் உயர துவங்கியுள்ளதால் நகைப் பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.