- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- ஆவின் பால் கொள்முதல் விலை அதிகரிப்பு
ஆவின் பால் கொள்முதல் விலை அதிகரிப்பு
By: vaithegi Thu, 05 Oct 2023 2:11:32 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி கொண்டு வருகிறது. எனவே இதனை சரி செய்யுமாறு பால் முகவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து இது குறித்து ஆலோசிக்கப்பட்டு தற்போது அதிக கொழுப்பு சத்து மற்றும் இதர சத்துக்கள் நிறைந்த பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
எனவே அதன்படி பாலின் தரத்துக்கு ஏற்ப உச்சபட்சமாக 7.5 சதவீதம் வரை பாலின் கொள்முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டால் பால் விற்பனையில் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று அவர் தெரிவித்து உள்ளார்.