Advertisement

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது

By: vaithegi Thu, 31 Aug 2023 4:28:39 PM

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது

மும்பை ;இன்று சென்செக்ஸ் 256 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது .... அதானி குழுமம் தொடர்பான புதிய சர்ச்சை, கடந்த ஜூன் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் மாருதி சுசுகி இந்தியா உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. ஆனால் அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இதையடுத்து மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,836 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,784 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 148 நிறுவன பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

stock trading,stock market ,பங்கு வர்த்தகம் , பங்குச் சந்தை


மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.309.69 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.61 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

எனவே இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 255.84 புள்ளிகள் குறைந்து 64,831.41 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 93.66 புள்ளிகள் சரிவு கண்டு 19,253.80 புள்ளிகளில் முடிவுற்றது.

Tags :