- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு 2014ம் ஆண்டு முதல் அதிகரித்து இருப்பதாக தகவல்
இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு 2014ம் ஆண்டு முதல் அதிகரித்து இருப்பதாக தகவல்
By: vaithegi Sun, 27 Aug 2023 11:17:12 AM
இந்தியா: இந்தியாவில் மத்திய அரசு கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல், நிலையான எல்பிஜி பயன்பாட்டை உறுதி செய்யவும், அனைத்து உஜ்வாலா பயனாளிகளுக்கும் மலிவு விலையில் சிலிண்டர் வழங்கவும் ரூ.200 கூடுதல் மானியம் வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 1, 2023 நிலவரப்படி, எல்பிஜி சிலிண்டருக்கான பயன்பாடு 2014 முதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து தற்போது அதன் எண்ணிக்கை 187 மற்றும் 13,896 இலிருந்து 208 மற்றும் 25,398 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பயன்பாட்டிற்கு தகுந்தாற் போல விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஆனாலும் மக்கள் நிலையாக எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்த, அரசாங்கம் தொடர்ந்து அதன் விலையை ஒழுங்குபடுத்தி கொண்டு வருகிறது. அதனால் ஏழை குடும்பங்கள் விலை ஏற்றத்தில் இருந்து பாதுகாக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.