Advertisement

இதன் விலை இன்று மீண்டும் உயர்வை கண்டுள்ளது

By: vaithegi Thu, 12 Jan 2023 4:32:11 PM

இதன் விலை இன்று மீண்டும் உயர்வை கண்டுள்ளது

சென்னை:ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ..... தமிழகத்தில் தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் அதிரடி உயர்வை கண்டது. கடந்த மாதம் ரூ. 40 ஆயிரத்திற்கு மேல் விற்பனையான தங்கத்தின் விலையானது இம்மாதம் அதிரடியாக ரூ.41 ஆயிரத்தை தொட்டது.

இதையடுத்து, தற்போது படிப்படியாக அதிகரித்து தங்கத்தின் விலை ரூ.42 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.அந்த வகையில் கடந்த 19ம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.42,080க்கு விற்பனையானது.

the price of gold,sawaran , தங்கத்தின் விலை ,சவரன்

நேற்று தங்கத்தின் விலையானது சற்று குறைந்து ரூ.41,840க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் உயர்வை கண்டுள்ளது. எனவே அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,888க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6 அதிகரித்து ரூ.5,236க்கு விற்பனையாகிறது. அதே சமயம் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 44,784 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,598 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமின்றி நேற்று நிலவரப்படி விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74க்கும், அத்துடன் ஒரு கிலோவுக்கு ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :