- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் .. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்
இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் .. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்
By: vaithegi Fri, 17 Mar 2023 12:26:10 PM
சென்னை: தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய புதிய உச்சத்தை தொடுகிறது. எனினும் நகைப்பிரியர்கள் தங்கத்தை வாங்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரிப்பதுடன், தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதனால் சாமானிய மக்கள் எப்போது தங்கம் விலை குறையும் என காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே வருகிறது. கடந்த 15ம் தேதி அன்று தங்கத்தின் விலை ரூ.43,040க்கு விற்பனையான நிலையில், நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.360 அதிகரித்து , ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடி உயர்வை கண்டுள்ளது.
எனவே அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,450-க்கும், இதே போல் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரன் ரூ.43,600க்கும் விற்பனையாகிறது.
இதே போன்று வெள்ளியின் விலையும் கிராம் 40 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.73.10க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.