- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- கடந்த வாரம் பாமாயில் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று அதிரடி சரிவு
கடந்த வாரம் பாமாயில் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று அதிரடி சரிவு
By: vaithegi Tue, 19 Sept 2023 1:00:20 PM
விருதுநகர் :மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் ... விருதுநகர் சந்தை விலை நிலவரப்படி கடந்த வாரம் பருப்புகளின் விலை விண்ணை முட்டும் அளவு அதிகரித்தது. அரிசியை தொடர்ந்து பருப்புக்கும் அதிக விலையில் கொடுப்பதா? என இல்லத்தரசிகள் பெரும் வேதனை அடைந்தனர்.
இதனையடுத்து இந்த வாரம் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உருட்டு உளுந்து 1 மூட்டைக்கு ரூ. 500 வரை குறைந்துள்ளது. தற்போது 100 கிலோ உளுந்து ரூ.13,000 -க்கு விற்பனையாகி கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பாசிப்
அதே போன்று துவரம் பருப்பு கடந்த வாரம் 16,500-க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் 16,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாமாயில் விலை 15 லிட்டர் ரூ.1,380 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பலரும் பாமாயில் வாங்குவதை தவிர்த்து வந்தனர். இந்த வாரம் அதன் விலை சற்று குறைந்து உள்ளது அதாவது ஒரு டின்னுக்கு 20 குறைந்து ரூ. 1,360-க்கு விற்பனையாகி கொண்டு வருகிறது.