- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- வாடிக்கையாளர்களை கவர மஹிந்திரா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
வாடிக்கையாளர்களை கவர மஹிந்திரா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
By: Monisha Thu, 21 May 2020 6:01:12 PM
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது ‘Own Now, Pay In 2021’ என்று அழைக்கப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் மஹிந்திரா வாகனத்தை வாங்க அந்நிறுவனம் கவர்ச்சிகர நிதி சலுகைகளை வழங்கி வருகிறது.
கஸ்டமைஸ் செய்யக்கூடிய வகையில் சந்தையில் முதல் முறையாக இதுபோன்ற சலுகையை மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் மன கவலையை போக்குவதோடு, புதிய மஹிந்திரா காரை வாங்குவதற்கான நிதி உதவியையும் வழங்குகிறது.
மஹிந்திராவின் ‘Own Now, Pay Later’ திட்டத்தின் கீழ் புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்கான கடன் தொகையை 90 நாட்கள் கழித்து செலுத்த முடியும். இத்துடன் பெண் ஓட்டுனர்களுக்கு சிறப்பு சலுகை, 100 சதவீத ஆன்-ரோட் நிதி வசதி மற்றும் 8 ஆண்டுகளுக்கு மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. புதிய கார் வாங்கும் மருத்துவர்களுக்கு ‘Own Now, Pay Later’ சலுகையுடன் பிராசஸிங் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.