Advertisement

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடக்கம்

By: vaithegi Mon, 22 May 2023 12:11:16 PM

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடக்கம்

மும்பை : சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்வு ... வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 123 புள்ளிகள் சரிவடைந்து 61,606 ஆக இருந்தது. இதேபோன்று , தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22 புள்ளிகள் சரிந்து 18,180 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. இருந்தபோதிலும் வர்த்த நேரத்தின்போது ஆரம்ப நேரத்து சரிவை சரி செய்து ஏற்றமடைந்தது. காலை 09:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 249.86 புள்ளிகள் உயர்வடைந்து 61,979.54 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 53.80 புள்ளிகள் அதிகரித்து 18,257.20 ஆக இருந்தது.

trading,stock market ,வர்த்தகம் , பங்குச்சந்தை

உலகளாவிய சந்தைகள் கலவையான போக்குகள் காரணமாக இந்த வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை சரிவில் தொடங்கிய போதிலும், இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக நேரத்தின்போது தொடக்க நிலை சரிவில் இருந்து மீண்டு ஏற்றத்தைச் சந்தித்தது.

மேலும் தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்போசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, டிசிஎஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர்,

இதனை அடுத்து எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன. இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.


Tags :