Advertisement

மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடக்கம்

By: Nagaraj Mon, 21 Nov 2022 10:31:57 PM

மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடக்கம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் திங்கள் கிழமை வீழ்ச்சியுடனேயே தொடங்கியது.


சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்து 61,163 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 124 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 18,182 ஆக இருந்தது. திங்கள்கிழமை காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 504.57 புள்ளிகள் சரிவுடன் 61,158.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 151.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,156.50 ஆக இருந்தது.

down 500 points,sensex,startup,sales,stocks ,500 புள்ளிகள் சரிவு, சென்செக்ஸ், தொடக்கம், விற்பனை, பங்குகள்

உலகளாவிய சந்தையின் மந்தமான போக்கின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் இன்று சரிவுடனேயே தொடங்கியது. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை மாருதி சுசூகி, ஆக்சிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. மறுமுனையில் ஐசிஐசிஐ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்.

எம் அண்ட் எம், இந்துஇண்டஸ் பேங்க், எல் அண்ட் டி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பவர்கிரிட் கார்ப்பரேஷன், டைடன் கம்பெனி, ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், விப்ரோ, இன்ஃபேசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

Tags :
|
|