- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- பெட்ரோல் மற்றும் டீசல் விலை 13வது நாளாக இன்றும் உயர்வு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை 13வது நாளாக இன்றும் உயர்வு
By: Monisha Fri, 19 June 2020 10:36:50 AM
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. இந்நிலையில், 13வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
இதன் காரணமாக சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் உயர்ந்து, 74 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 56 காசுகள் உயர்ந்து ரூ.78.37 ஆகவும், டீசல் விலை 63 காசுகள் உயர்ந்து ரூ.77.06 ஆகவும் விற்பனை ஆகிறது.