Advertisement

பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.5 வரை விலை உயர வாய்ப்பு

By: Monisha Thu, 11 June 2020 4:11:30 PM

பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.5 வரை விலை உயர வாய்ப்பு

சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 16-ம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

இந்நிலையில், பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அடுத்துவரும் 10 நாட்களும் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.5 வரை உயர வாய்ப்புள்ளது.

petrol,diesel,price hike,delhi,chennai ,பெட்ரோல்,டீசல்,விலை உயர்வு,டெல்லி,சென்னை

கடந்த ஏப்ரல் மாதம் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்து 15 முதல் 20 டாலராகச் சரிந்த நிலையில் இப்போது பீப்பாய் ஒன்று 40 டாலராக அதிகரித்துள்ளதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணமாகும்.

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு இன்று 60 பைசா உயர்த்தப்பட்டு, ரூ.74 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.72.22 ஆகவும் விற்கப்படுகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.77.96 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.70.64 பைசாவாகவும் இருக்கிறது.

Tags :
|
|
|