Advertisement

349-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லை

By: vaithegi Fri, 05 May 2023 11:59:18 AM

349-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லை

சென்னை: கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% அதிகரித்தது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.

petrol and diesel price , பெட்ரோல் ,டீசல் விலை


அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 29.00 அல்லது 0.51% என உயர்ந்து ரூ.5,676 ஆக உள்ளது. ஆனால், ஓராண்டை நெருங்கியபோதிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அடுத்து 349-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

Tags :