Advertisement

பெட்ரோல், டீசல் விலை 9-வது நாளாக உயர்வு

By: Monisha Mon, 15 June 2020 10:54:25 AM

பெட்ரோல், டீசல் விலை 9-வது நாளாக உயர்வு

சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 16-ம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

இந்நிலையில், பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

petrol,diesel,price hike,delhi,chennai ,பெட்ரோல்,டீசல்,விலை உயர்வு,டெல்லி,சென்னை

அன்றைய தினம் பெட்ரோல் 53 காசுகளும், டீசல் 52 காசுகளும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தினந்தோறும் விலை உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் இன்று 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 79 ரூபாய் 96 காசுகளாக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 72 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|