Advertisement

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பெட்ோலிய ஏற்றுமதி நாடுகள் முடிவு

By: Nagaraj Thu, 06 Oct 2022 8:52:00 PM

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பெட்ோலிய ஏற்றுமதி நாடுகள் முடிவு

நியூயார்க்: அதிர்ச்சி அளிக்கும் செய்தி... கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் முடிவு செய்துள்ளன.

அதிக பணவீக்கம் மற்றும் உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

crude oil,economic,issues,oil market,petroleum ,அபாயம், கச்சா எண்ணெய், டீசல், பணவீக்கம், பீப்பாய்கள், பெட்ரோல்

இதனால் எண்ணெய் விலையை உயர்த்தும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த நாடுகளின் அமைச்சர்கள் வியன்னாவில் சந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அதன்படி நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரும் என அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

உலகப் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தைக் கண்ணோட்டத்தைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் முடிவால், சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
|