- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- வாரந்தோறும் 250-க்கு மேற்பட்ட விமான சேவை அளிக்க திட்டம்
வாரந்தோறும் 250-க்கு மேற்பட்ட விமான சேவை அளிக்க திட்டம்
By: Nagaraj Sun, 18 Sept 2022 11:34:26 PM
புதுடில்லி: வாரந்தோறும் 250-க்கு மேற்பட்ட விமான சேவை... புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்திய விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஆகாசா ஏா், வாரந்தோறும் 250-க்கு மேற்பட்ட விமான சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் அக்டோபா் மாத்தின் இரண்டாவது வாரத்துக்குள், 9 உள்நாட்டு விமான வழித்தடத்தில் வாரந்தோறும் 250-க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
அக்டோபா் 7-ஆம் தேதி முதல், பெங்களூருக்கும் அகமதாபாதுக்கும் இடையே விமான சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவில் 5-ஆவதாக ஒரு விமானம் நிறுவனத்தின் பணியில் இணைக்கப்படவுள்ளது.
அந்த விமானம் சோ்க்கப்படுவது, வாரத்துக்கு 250-க்கும் மேற்பட்ட விமானப்
போக்குவரத்து சேவைகளை அளிக்கும் இலக்கை அடையவதற்கு வழிவகை செய்யும் என்று
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை -
பெங்களூரு நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவையை நிறுவனம் கடந்த
வாரம் முதல் தொடக்கியது. அந்த நகரங்களுக்கு இடையே தினமும் 2 விமானங்கள்
இயக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.
இது தவிர, சென்னைக்கும்
கொச்சிக்கும் இடையே வரும் 26-ஆம் தேதி முதல் விமானங்களை இயக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எங்களது விமானப் போக்குவரத்து
சேவைகளை படிப்படியாகவும், அதே நேரத்தில் மிக விரைவாகவும் விரிவுபடுத்தும்
திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த புதிய சேவைகள் அறிமுகப்படுவதாக நிறுவனம்
தெரிவித்தது.