Advertisement

போக்கோ பிராண்டின் புதிய எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம்!

By: Monisha Wed, 01 July 2020 5:49:52 PM

போக்கோ பிராண்டின் புதிய எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம்!

போக்கோ பிராண்டு தனது புதிய எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டீசரின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் பார்க்க ரெட்மி நோட் 9 ப்ரோ சர்வதேச மாடல் போன்று தெரிகிறது. போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் M2003J6CI எனும் மாடல் நம்பருடன் சியோமி வலைதளத்தில் வெளியாகி இருந்தது.

புதிய ஸ்மார்ட்போனில் வெவ்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் அதிக ரிஃப்ரெஷ் ரேட் எல்சிடி ஸ்கிரீன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் MIUI 11 யுசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் டூயல் பேண்ட் வைபை கனெக்டிவிட்டி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என போக்கோ பிராண்டு தெரிவித்து இருக்கிறது.

Tags :
|