- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- ஆபரணத் தங்கத்தின் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை
By: vaithegi Mon, 12 Sept 2022 4:07:27 PM
சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும்
அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்
மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக
கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு
வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக
கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை
அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும்
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த
தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால்
அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 5ம் தேதி சற்று ஏற்றுத்துடன் விற்பனையான நிலையில், அதன் பின் மீண்டும் குறைந்தது. இதேபோன்று நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை .4,740 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 4725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரையில், கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.60.50-க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி 60,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.