Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Thu, 15 Sept 2022 12:11:05 PM

ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

gold price,chennai , தங்கம் விலை,சென்னை

மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதார சரிவால் மத்திய அரசு ஜிஎஸ்டி மற்றும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. அதனால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் திருமணத்திற்காக நகைகள் வாங்க திட்டமிட்டோர் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நேரத்தில் சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 168 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று ரூ. 37,440க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 21 குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது.

Tags :