- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா நியமனம்!
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா நியமனம்!
By: Monisha Thu, 02 July 2020 5:27:34 PM
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பொறுப்பேற்று உள்ளார். இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா இதற்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சுத்திகரிப்பு இயக்குநராகப் பதவி வகித்து வந்தார். இவர் ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பொறியியல் படித்து முடித்து பட்டம் பெற்றுள்ளார். ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பெட்ரோ கெமிக்கல் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
இந்நிலையில், அவரை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளனர். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் டேங்கிங் லிமிடெட் ஆகியவற்றுக்கும் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தலைவராக இருப்பார். இவ்வாறு இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.