Advertisement

பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின

By: Nagaraj Mon, 26 Dec 2022 3:15:27 PM

பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின

மும்பை: பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்... கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பின்னர் தொடங்கிய வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

கடந்த வார இறுதியில் பிஎஸ்இயில் வர்த்தகம் 59,845.29 புள்ளிகளில் முடிவடைந்தது. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 59,755.08 புள்ளிகளுடன் தொடங்கியது. இதன்பின், காலை 9.40 மணியளவில் சென்செக்ஸ் 447.68 புள்ளிகள் உயர்ந்து 60,292.97 புள்ளிகளாக இருந்தது.

அதிகபட்சமாக 60,307.94 புள்ளிகளை எட்டியது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் இன்று நிஃப்டி குறியீடு 100 புள்ளிகள் வரை உயர்ந்தது. காலையில் நிஃப்டி குறியீடு 17,950 புள்ளிகளில் காணப்பட்டது. நிஃப்டியில் வங்கி, ஆட்டோ, உலோகம், மீடியா, ஐடி உள்ளிட்ட பல துறைகள் இன்று காலை லாபத்துடன் தொடங்கியது.

mumbai,share market,stock trade, ,பங்குச்சந்தை, மும்பை, வர்த்தகம், ஆரம்பம், அதிகரிப்பு

மருந்துத் துறை சற்று சரிவைக் கண்டது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்துடன் துவங்கின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் ரூ.82.85 ஆக இருந்தது, ஆரம்ப வர்த்தகத்தில் 0.11 சதவீதம் அதிகரித்து 82.77 ஆக இருந்தது.

Tags :
|