- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- நாளுக்கு நாள் உச்சம் தொடும் தங்கத்தின் விலை
நாளுக்கு நாள் உச்சம் தொடும் தங்கத்தின் விலை
By: vaithegi Tue, 01 Aug 2023 11:11:31 AM
சென்னை: இன்று சவரனுக்கு ரூபாய் 160 விலை உயர்வு ... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஆனது இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.
இதையடுத்து அதன்படி நேற்று 1 சவரன் ரூபாய் 44,400 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூபாய் 160 விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதியான இன்றைய காலை நேர வணிக சந்தை விற்பனை நிலவரத்தின்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹5570 க்கும்,
மேலும் 1 சவரன் ரூபாய் 44,560 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூபாய் 6,037 க்கும், 1 சவரன் ரூபாய் 48,296 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து வெள்ளியின் விலை ஆனது சில்லறை விற்பனையில் 1 கிராம் ரூபாய் 81 க்கும், ஒரு கிலோ ரூபாய் 81 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.