Advertisement

தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது

By: vaithegi Wed, 28 Sept 2022 11:07:39 AM

தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

gold,price ,தங்கம் விலை

தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக 37 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இது அனைத்து மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே கூறலாம். இப்படி, பண்டிகை நாட்களை முன்னிட்டு தங்கம் விலை குறைந்தது காரணமாக நகை கடைகளில் மக்கள் அதிகம் காணப்பட்டனர்.ஆனால் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,625 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.60.00 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|