Advertisement

சில நாட்களாக குறைந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது

By: vaithegi Thu, 29 Sept 2022 10:52:03 AM

சில நாட்களாக குறைந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

gold,chennai ,தங்கம் விலை,சென்னை

சில நாட்களுக்கு முன்பு வரை இறங்கு முகமாக சென்ற தங்கம் விலை தற்போது ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக இனி வரும் நாட்கள் ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி என இருப்பதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (29-09-2022) வெளியாகி உள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.4,680 க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.37,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் அதிகரித்து ரூ.61.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|