- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைவு
By: vaithegi Tue, 11 Oct 2022 11:23:03 AM
சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும்
அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்
மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக
கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு
வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக
கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை
அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும்
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.
நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி வர உள்ளது. இப்போதே, மக்கள் தீபாவளி பண்டிகைக்காக ஆயத்தமாக தொடங்கி உள்ளனர். இதனால் நகை கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் நேற்று , 22 கேரட் தங்க நகை சவரன் ரூ.38,440க்கும், 1 கிராம் ரூ.4,805க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதேபோன்று, 1 கிராம் ரூ.65 குறைந்து ரூ.4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது.