- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- பஞ்சாப் அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை உயர்த்தியுள்ளது
பஞ்சாப் அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை உயர்த்தியுள்ளது
By: vaithegi Sun, 11 June 2023 4:00:01 PM
பஞ்சாப் : வாட்வரியை அதிகரித்துள்ளது பஞ்சாப் அரசு .... கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றமில்லாமல் விற்பனையான நிலையில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பஞ்சாப் அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை உயர்த்தி உள்ளது .
இதனை அடுத்து தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் வாட் வரி உயர்வால் பஞ்சாப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.65க்கும், டீசல் ரூ.105.24க்கும் விற்பனையாகிறது.
2 நாட்களுக்கு முன்பு தான் பெட்ரோல் விலை குறையும் என்று செய்தி ஒன்று வெளியான நிலையில், பஞ்சாப்பில் தலைகீழாக அதிகரித்துள்ளது அந்த மாநில மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியான செய்தி.
முதல்வர் பகவந்த் மானின் அரசாங்கம் எரிபொருள் விலையை இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது . ஏற்கனவே கடந்த பிப்ரவரியில், பஞ்சாப் மாநில அமைச்சரவை ஆண்டுக்கு ரூ.300 கோடி கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீது, 90 பைசா VAT வரிக்கு ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.