Advertisement

பங்கு சந்தையில் நான்காவது நாளாக எழுச்சி

By: Nagaraj Wed, 14 Sept 2022 10:24:18 AM

பங்கு சந்தையில் நான்காவது நாளாக எழுச்சி

மும்பை: பங்கு சந்தையில் எழுச்சி... பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 18,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்தது.

முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நிஃப்டி 18,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இன்றைய அமர்வில், சென்செக்ஸ் 1,540 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.

Tags :
|
|